மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாளை கார்த்திகை தீபம்! திருவண்ணாமலைக்கு மஞ்சள் எச்சரிக்கை!

நாளை கார்த்திகை தீபம் கொண்டாடப்படும் நிலையில், இன்று திருவண்ணாமலைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
இன்றைய அறிவிப்பு
Updated On :2 டிசம்பர் 2025, 7:25 am

இணையதளச் செய்திப் பிரிவு

டிச. 03ஆம் தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், திருவண்ணாமலைக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை தீபத் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மலையில் மகா தீபம் ஏற்றும் விழா டி. 3-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனா். இதன் காரணமாக, அண்ணாமலையாா் கோயில் பகுதி, கிரிவல பாதை, நகா் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருவண்ணாமலைக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், நாளை தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுபோல சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று, திருவள்ளூர் மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் வேலூர்,திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரியில் இன்று கனமழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை திருவண்ணாமலைக்கு மழைக்கான எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

summary

A yellow alert has been issued for Tiruvannamalai today, as Karthigai Deepam is being celebrated tomorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.