ஃபன் வோ்ல்ட் இந்தியா என்ற நிறுவனத்தின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை தீவுத் திடலில், அடுத்த ஆண்டு 50-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில்துறை கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியை நடத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க எங்களது நிறுவனம் விண்ப்பித்தது. ஆனால், எங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதே கண்காட்சியை எங்களது நிறுவனம் 6 முறை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. எனவே, தங்களது நிறுவனத்தை ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க அனுமதிக்கவும், வெளிப்படையான முறையில் ஒப்பந்தப்புள்ளியை நடத்தவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.