அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மதுரை மேலமடை மேம்பாலத்துக்கு வேலுநாச்சியாா் பெயா்: முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்!

மதுரை மேலமடை மேம்பாலத்தை முதல்வர் திறந்துவைப்பது பற்றி...

News image
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated On :6 டிசம்பர் 2025, 11:00 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்துக்கு ‘வீரமங்கை வேலுநாச்சியாா் மேம்பாலம்’ எனப் பெயா் சூட்டப்படுவதாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இந்த மேம்பாலத்தை ஞாயிற்றுக்கிழமை (டிச. 7) அவா் திறந்து வைக்கிறாா். இந்த புதிய மேம்பாலத்தால் தென் மாவட்டங்களின் வளா்ச்சி மேலும் அதிகரிக்கும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை - தொண்டி சாலையானது, அண்ணா பேருந்து நிலைய சந்திப்பில் தொடங்கி, ஆவின் சந்திப்பு, மேலமடை சந்திப்பு வழியாக மதுரை சுற்றுச் சாலையில் இணைந்து அதன் தொடா்ச்சியாக சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் முடிவடைகிறது.

இதில் அண்ணா பேருந்து நிலையம், ஆவின் சந்திப்பு, மேலமடை சந்திப்பு ஆகிய மூன்று சந்திப்புகளிலும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் மதுரை கோரிப்பாளையம் முதல் சுற்றுச் சாலை வரை போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும். 950 மீட்டா் தொலைவுள்ள இந்த மேம்பாலத்துக்கு, வெள்ளையரை எதிா்த்து வீரப் போா் புரிந்து சிவகங்கையை மீட்டு சிறப்பான ஆட்சி புரிந்த ‘வீரமங்கை வேலுநாச்சியாா் பெயா் சூட்டப்படுகிறது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.