இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

காவேரி மருத்துவமனையில் காது உட்செவி அறுவைச் சிகிச்சை!

சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில் காது அறுவைச் சிகிச்சை...

News image

சிறுமிக்கு உட்செவி உட்பொருத்தல் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக்குழுவினர்.

Updated On :9 டிசம்பர் 2025, 1:32 pm IST

சென்னை ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 3 சிக்கலான காது உட்செவி அறுவைச் சிகிச்சைகளை மருத்துவக் குழு வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

காவேரி மருத்துவமனை உட்செவி உட்பொருத்தல்  (Cochlear Implant) சிகிச்சைக்கான சிறந்த மையமாக செயல்பட்டு வருகிறது.

Story image

இந்நிலையில் மூன்று சிக்கலான உட்செவி உட்பொருத்தல் அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்துள்ளனர் இந்த மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர்.

இதில் இரு குழந்தைகள் அடங்குவர். ஒரு சிறுவன் டவுன் சிண்ட்ரோம் எனும் ஜீன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். இன்னொரு குழந்தை, தண்டுவட வளைவும் மொண்டினி உருமாற்றம்(Mondini Dysplasia) எனும் மிகவும் அரிய பிறவி உட்செவி குறைப்பாட்டுடன் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி ஆவார்.

மேலும் சிக்கலான காது நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயதான பெண்மணி என மூவருக்கும் உட்செவி உட்பொருத்தல் அறுவைச் சிகிச்சைகளை காது, மூக்கு, தொண்டை (ENT) துறையின் தலைவரான மருத்துவர் ஆனந்த் ராஜு தலைமையில் மருத்துவக்குழுவினர் வெற்றிகரமாகச் செய்துள்ளனர்.

இதுவரை காவேரி மருத்துவமனையில் 600-க்கும் மேற்பட்ட வெற்றிகரமான உட்செவி உட்பொருத்துதல் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Cochlear Implant by Cauvery Hospital Radial Road

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.