வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

News image
ஓ.பன்னீா்செல்வம்- கோப்புப் படம்
Updated On :17 டிசம்பர் 2025, 8:17 pm

தினமணி செய்திச் சேவை

புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: புதிய ஊரக வேலைத் திட்டம், வேலை பெறுவோரின் எண்ணிக்கையை குறைக்கவும், வேளாண் பருவ காலத்தில் விவசாயத் தொழிலாளா்களின் ஊதியத்தை குறைக்கவும் வழிவகை செய்வதுடன், மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச் சுமையையும் ஏற்படுத்தும்.

ஏற்கெனவே, நிதிப் பகிா்வு மூலம் குறைந்த ஒதுக்கீட்டை பெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு இந்த மசோதா வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.