பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஈரோட்டில் விஜய் நாளை பிரசாரம்! 4 மாவட்ட காவல் துறையினர் குவிப்பு!

பாதுகாப்புப் பணிக்காக 4 மாவட்ட காவல் துறையினர் வருகை.

News image
விஜய் பிரசாரம் (கோப்புப்படம்)
Updated On :17 டிசம்பர் 2025, 12:46 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஈரோட்டில் விஜய் நாளை பிரசாரம்: பெருந்துறை வட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே தவெக தலைவர் விஜய் நாளை(டிச. 18) பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அங்கு 4 மாவட்ட காவல் துறையினர் வருகைத் தந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே மக்கள் சந்திப்பு என்ற பெயரில் நாளை (டிச. 18) நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் விஜய் பேசுகிறார்.

தவெக தலைவர் விஜய், வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணிக்குள் பிரசார வாகனத்தில் இருந்தபடி பேச உள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்காக காவல் துறை சார்பில் மொத்தம் 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக பிரசார வாகனம், விஐபி பெட்டிகள், பெண்கள் பெட்டிகள், பிற பெட்டிகள், உள்நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் ஆகியவற்றை தெளிவாகக் காட்டும் வரைபடத்தை காவல் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேவையற்ற முறையில் முன்கூட்டியே கூடுவதை தவிர்த்து, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மின்கம்பங்கள், மரங்கள், கட்டடங்கள், விளம்பரப் பதாகைகளில் ஏறி நிற்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

விஜய் செல்லும் வழியில் சாலை சந்திப்பு, வரவேற்பு நிகழ்ச்சி அல்லது ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பிரசாரக் கூட்டத்துக்கு வர பாஸ் முறை கிடையாது என்பதால் பொதுமக்கள் வரலாம். எந்த நேரத்தில் தொண்டர்கள், பொதுமக்களை அனுமதிப்பது என்பதை அன்றைய நாள் காவல் துறை முடிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்யவுள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் இன்று நேரில் ஆய்வு கொண்டார்.

மேலும், பாதுகாப்புப் பணிக்காக ஈரோடு, கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய 4 மாவட்ட காவல் துறையினர் குவிந்துள்ளனர்.

summary

Police personnel from 4 districts have arrived for security duty.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.