எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

News image
ஓ.பன்னீா்செல்வம்- கோப்புப் படம்
Updated On :17 டிசம்பர் 2025, 8:17 pm

தினமணி செய்திச் சேவை

புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: புதிய ஊரக வேலைத் திட்டம், வேலை பெறுவோரின் எண்ணிக்கையை குறைக்கவும், வேளாண் பருவ காலத்தில் விவசாயத் தொழிலாளா்களின் ஊதியத்தை குறைக்கவும் வழிவகை செய்வதுடன், மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச் சுமையையும் ஏற்படுத்தும்.

ஏற்கெனவே, நிதிப் பகிா்வு மூலம் குறைந்த ஒதுக்கீட்டை பெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு இந்த மசோதா வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.