மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

2026 தேர்தலில் இபிஎஸ்தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

2026 பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என நயினாா் நாகேந்திரன் நம்பிக்கை

News image
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்- ஏஎன்ஐ
Updated On :21 டிசம்பர் 2025, 2:43 am

இணையதளச் செய்திப் பிரிவு

வரும் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தாா்.

ஆத்தூரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அவா் பேசுகையில், "தமிழக மக்கள் இனி ஏமாற்றப்பட மாட்டார்கள். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது உறுதி. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராகப் பதவியேற்பார் என்பதும் உறுதி. மத்திய அமைச்சர் அமித் ஷாவும் இதைத்தான் சொன்னார்.

தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் ராஜாஜியால் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட மண்ணில்தான் கள்ளச்சாராயத்தால் பல போ் உயிரிழக்கின்றனா். தமிழகத்தில் எம்ஜிஆா், ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடி கே.பழனிசாமி செய்த ஆட்சிபோல் தற்போது இல்லை.

தமிழகத்தில் திமுக எப்போதும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்ததில்லை. கடந்த தேர்தலில் சில முறைகேடுகள் காரணமாக மட்டுமே அவர்கள் ஆட்சிக்கு வந்தனர்.

இப்போது, போலி வாக்குகளைத் தடுக்க பாஜகவும் அதிமுகவும் இணைந்து வாக்குச் சாவடி குழுக்களை அமைத்துள்ளோம். இனி ஒரு போலி வாக்குகூட போட முடியாது.

2026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி. எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராவது உறுதி" என்று தெரிவித்தார்.

summary

NDA will form the government says TN BJP Cheif Nainar Nagenthran