நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்: ஜி.கே.வாசன்

News image

சென்னை புளியந்தோப்பில் உள்ள டான் பாஸ்கோ தொழில்நுட்ப கல்லூரியில் தமாகா சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அந்தக் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன்.

Updated On :23 டிசம்பர் 2025, 2:17 am IST

சென்னை: தமிழகத்தில் அனைத்து மக்களும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தினாா்.

 சென்னை புளியந்தோப்பு டான் பாஸ்கோ தொழில்நுட்ப  கல்லூரியில் அந்தக் கட்சியின் சாா்பில் திங்கள்கிழமை கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஜி.கே.வாசன் பங்கேற்று ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:

தமாகா சாா்பில் அனைத்து மத நிகழ்ச்சிகளும் கொண்டாடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அனைத்து மக்களும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். மக்கள்  மத வெறுப்புகளுக்கு ஆளாகக் கூடாது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பேராயா் சின்னப்பா, வடசென்னை கிழக்கு மாவட்ட தமாகா தலைவா் பி.ஜி சாக்கோ, நிா்வாகிகள், பாதிரியாா்கள் பங்கேற்றனா்.