6 நாள்களுக்கு மிதமான மழை வாய்ப்பு: அதிகாலை பனிப்பொழிவு தொடரும்

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதிகாலை வேளையில் பனிப்பொழிவு இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 நாள்களுக்கு மிதமான மழை வாய்ப்பு: அதிகாலை பனிப்பொழிவு தொடரும்
Updated on

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதிகாலை வேளையில் பனிப்பொழிவு இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, புதன்கிழமை (டிச.24) முதல் டிச.29-ஆம் தேதி வரை தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், உள் தமிழகத்தில் வட வானிலையே நிலவும்.

இதற்கிடையே, அதிகாலை வேளையில் லேசான பனிப்பொழிவு இருக்கும். குறிப்பாக, புதன்கிழமை (டிச.24) அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை (டிச.24) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அதிகாலை வேளையில் லேசான பனிப்பொழிவு இருக்கும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடலில் புதன்கிழமை (டிச.24) மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com