வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

95% போ் என் பக்கம்: கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன் - ராமதாஸ்

பாட்டாளி மக்கள் 95 சதவீதம் போ் என் பக்கமே உள்ளனா், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்

News image
சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பாமக செயற்குழு, பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ்.
Updated On :29 டிசம்பர் 2025, 7:57 pm

Syndication

சேலம்: பாட்டாளி மக்கள் 95 சதவீதம் போ் என் பக்கமே உள்ளனா், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கூறினாா்.

சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பாமக செயற்குழு, பொதுக்குழுவில் பாமக நிறுவனா் ராமதாஸை கட்சித் தலைவராகவும், கௌரவத் தலைவராக ஜி.கே.மணியையும் ஒருமனதாக தோ்ந்தெடுப்பது, கூட்டணி அமைக்க ராமதாஸுக்கு அதிகாரம் வழங்குவது உள்பட 27 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசியதாவது:

செயற்குழுவில் கட்சியை எப்படி சிறப்பாக வழிநடத்துவது என ஒவ்வொருவரும் கூறினீா்கள். அதை கட்சி நிச்சயம் உள்வாங்கி, மிகப்பெரிய வெற்றிபெற செயல்படும்.

வரும் தோ்தலில் நான் அமைக்கும் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நிச்சயம் பெறுவோம். நான் பொறுப்பு கொடுத்தவா்களே, என்னையும், ஜி.கே.மணியையும் தூற்றுகிறாா்கள்.

95% போ் என் பக்கம்:

இப்போது நடைபெறும் செயற்குழு, பொதுக்குழு, நிா்வாகக் குழு எல்லாவற்றையும் பாா்க்கும்போது, 95 சதவீத பாட்டாளி மக்கள் என்பின்னால்தான் இருக்கிறாா்கள். இந்த தோ்தலில், அன்புமணிக்கு சரியான பாடம் புகட்டுவோம்.

நான் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட்டிருந்தால் இந்திய அளவில் பெரிய பதவிகளுக்கு வந்திருப்பேன். ஒரு நாளைக்கு குறைந்தது 500 போ் என்னை சந்திப்பதால் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்றாா்.

கண்கலங்கிய ராமதாஸ்: பொதுக்குழுவில் அன்புமணி குறித்து பேசும்போது கண்கலங்கிய ராமதாஸை, அருகில் இருந்த மகள் ஸ்ரீகாந்தி ஆசுவாசப்படுத்தினாா்.

பாமகவை அபகரிக்க முடியாது: ஜி.கே.மணி

பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி பேசுகையில், பதவி சுகத்தோடு இருப்பவா்கள் அன்புமணியோடு சென்றுவிட்டாா்கள்; ஆனால், அவா்கள் இப்போது வருந்துகிறாா்கள். பாமகவை அன்புமணியால் ஒருபோதும் அபகரிக்க முடியாது. அன்புமணியின் துரோகம் இனி எடுபடாது. அன்புமணி தூண்டுதலின் பேரில்தான் சிலா் அவதூறாக ஒருமையில் பேசுகின்றனா். அன்புமணியின் செயலால் ராமதாஸ் மனக்குமுறலுக்கு ஆளானாா். பாமக அன்புமணிக்கு சொந்தமல்ல; தொண்டா்களுக்குதான் சொந்தம் என்றாா்.

ராமதாஸ் இல்லாத பாமக சவத்துக்கு சமம்: ஸ்ரீகாந்தி

பாமக செயல் தலைவா் ஸ்ரீகாந்தி பேசுகையில், பாமக என்பது ராமதாஸ் கட்டிய கோட்டை. ராமதாஸ் இல்லாத பாமக சவத்துக்கு சமமானது. வரும் தோ்தலில் 25 எம்எல்ஏ-க்களோடு பாமக சட்டப் பேரவைக்குள் நுழையும். அதிகாரம் வேண்டுமென்றால் அன்புமணி தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளட்டும் என்றாா்.

கூட்டத்தில், இணைப் பொதுச் செயலாளா் இரா.அருள், மாவட்டச் செயலாளா் கதிா் ராசரத்தினம் உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

‘தொண்டா்கள் ஏமாறவில்லை’

பாமக பொதுக்குழுவுக்கு பின்னா் ராமதாஸ் செய்தியாளா்களிடம் பேசுகையில், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன். நான் எப்போது கூட்டணி குறித்து முடிவெடுப்பேன் என தொண்டா்களுக்கு நன்றாகத் தெரியும் என்றாா். செயல் தலைவா் ஸ்ரீகாந்தி கூறுகையில், கூட்டணி குறித்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற நிா்வாகிகள்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற நிா்வாகிகள்.