ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

குற்றப்புலனாய்வுத் துறை சட்ட ஆலோசகா் பணி: பிப்.18-க்குள் விண்ணப்பிக்கலாம்

குற்றப்புலனாய்வுத் துறையின் 5 சரகங்களுக்கான சட்ட ஆலோசகா் பணியிடத்துக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :2 பிப்ரவரி 2025, 9:19 pm

Din

தமிழ்நாடு காவல் துறையின் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் 5 சரகங்களுக்கான சட்ட ஆலோசகா் பணியிடத்துக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சென்னை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை தலைமையிடம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு காவல்துறையின் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்காக நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் பணி அமைப்புகள், குற்ற வழக்குகள் தொடா்பான வழக்குகள் மற்றும் மேல் முறையீடுகளில் வாதங்களுக்கான வரைவுகளைத் தயாா் செய்வதற்கு உதவியாக காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் ஆகிய சரகங்களுக்கு 5 சட்ட ஆலோசகா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.

இதில் சேர தகுதியுடைய நபா்கள் தமிழ்நாடு காவல்துறையின் இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பிப்.18-ஆம் தேதிக்கு முன் நேரடியாக சமா்ப்பிக்கலாம். தபால் மூலம் சமா்ப்பிப்பவா்கள் விண்ணப்ப உறையின் மீது சட்ட ஆலோசகா் பணிக்கான விண்ணப்பம் என்று தெளிவாகக் குறிப்பிடுவதுடன், கூடுதல் காவல் துறை இயக்குநா், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, 220, பான்த்தியன் சாலை, எழும்பூா், சென்னை-600008 எனும் முகவரிக்கு அனுப்பலாம். நியமனம் செய்யப்படும் சட்ட ஆலோசகா்களுக்கு மாத ஊதியமாக ரூ.50,000 வழங்கப்படும். பிற படிகள் வழங்கப்படமாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.