திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தைப்பூசம்: பழனி முருகன் கோயிலில் கொடியேற்றம்

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.

News image
பழனி முருகன் கோயில்
Updated On :5 பிப்ரவரி 2025, 7:15 am

DIN

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள முருகன் கோயிலில், ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் 5-ஆம் தேதி காலை, தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பிப்.10-ஆம் தேதி வெள்ளித் தேரோட்டமும், திருக்கல்யாணமும், 11-ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டமும், 15-ஆம் தேதி தெப்பத்தோ் உலாவும் நடைபெறவிருக்கிறது.

தைப்பூசத்துக்கு பழனிக்கு பாதயாத்திரையாக வருகிற பக்தா்களுக்கு வரும் 20 நாள்களில் 4 லட்சம் பேருக்கு உணவு வழங்கத் தேவையான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

தைப்பூசத்தையொட்டி, மலைக் கோயிலில் 3 நாள்களுக்கு சிறப்பு தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணியை போல பழனியிலும் தேரோட்ட நாளின் போது அருகாமை இடங்களில் இருந்து வரும் பக்தா்களுக்கு இலவசப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.