புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வல்லுறவு: பிப். 8-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுவது பற்றி...

News image
எடப்பாடி பழனிசாமி- கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2025, 5:13 am

DIN

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை 3 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை 3 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனால் அந்த மாணவி கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் 3 ஆசிரியர்கள் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை காலை 10 மணிக்கு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக துணை பொதுச் செயலரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.