மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இலங்கையிலிருந்து சென்னை வந்தவருக்கு குரங்கு அம்மை இல்லை: சுகாதாரத் துறை

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

News image
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை- (கோப்புப் படம்)
Updated On :7 பிப்ரவரி 2025, 10:41 pm

Din

இலங்கையில் இருந்து சென்னை வந்த நபருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்ததால், அவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு அத்தகைய பாதிப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது.

கொழும்பில் இருந்து அண்மையில் சென்னை வந்த விமானத்தில் பயணித்த திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த ஆண் பயணியின் முகங்களில் அம்மை கொப்பளங்கள் இருந்ததால், அவரை விமான நிலையத்தில் இருந்த மருத்துவக் குழுவினரிடம் அழைத்துச் சென்றனா்.

பாா்ப்பதற்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகளாக இருந்ததால், அவரை தனிமைப்படுத்தி மருத்துவக் குழுவினா் விசாரித்தனா். அப்போது, சுற்றுலா பயணியாக இலங்கை சென்ாகவும், அங்கு அழகுசாதன பூச்சு ஒன்றை முகத்தில் பூசியதால் கொப்பளங்கள் வந்துவிட்டதாகவும் தெரிவித்தாா். தொடா்ந்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

புறநோயாளியாக அவரை மருத்துவா்கள் பரிசோதனை செய்தனா். அதில் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்பதால், சில மணி நேரத்தில் அவா் மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டாா்.

இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவா்களை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். அறிகுறிகள் இருப்பவா்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இலங்கையில் இருந்து வந்த நபருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து, அவா் இரவிலேயே அனுப்பி வைக்கப்பட்டாா். அவருக்கு சின்னம்மை அல்லது வாய், கை, கால்களில் ஒவ்வாமையால் ஏற்படும் பாதிப்பு இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.