தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மூணாறில் நாகர்கோவில் கல்லூரி பேருந்து விபத்து: 3 பேர் பலி!

மூணாறில் நாகர்கோவில் கல்லூரி பேருந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.

News image

மூணாறில் விபத்து

Updated On :19 பிப்ரவரி 2025, 7:25 pm IST

மூணாறு: மூணாறுக்கு சுற்றுலா சென்ற நாகர்கோவில் கல்லூரி பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 மாணவிகள் மற்றும் மாணவர் ஒருவர் பலியானதாக உறுதிசெய்யப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலமான மூணாறில் நாகர்கோவிலிலிருந்து கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த பேருந்து விபத்தில் கல்லூரி மாணவி மற்றும் ஆசிரியர் ஒருவர் பலியானதாகவும். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூணாறிலிருந்து வட்டவாடகைக்குச் செல்லும் சாலையில் எக்கோ பாயிண்ட் பகுதியில் அதிவேகமாக வந்த பேருந்து விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த பேருந்தில் பயணித்த பல மாணவர்கள் காயங்களுடன் மூணாறு டாடா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் தொடர் சிகிச்சை தேவைப்பட்டவர்கள், தேனி மருத்துவக் கல்லூரி, கோலஞ்சேரி, கோட்டயம் உள்பட பல்வேறு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இயங்கி வரும் கல்லூரியின் மாணவ, மாணவிகள் சென்ற சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளாகி, மாணவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆம்புலன்ஸ்கள் வரவைக்கப்பட்டன.

இந்த விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் ஒருவர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.