தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சிறந்த பால் உற்பத்தியாளா்களுக்கு தலா ரூ.25,000 பரிசு: அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினாா்

ஆவினின் சிறந்த பால் உற்பத்தியாளா்கள் மற்றும் சங்கச் செயலா்கள் என மொத்தம் 22 பேருக்கு தலா ரூ.25,000 பரிசுத் தொகை

News image

அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்

Updated On :28 பிப்ரவரி 2025, 8:27 pm

ஆவினின் சிறந்த பால் உற்பத்தியாளா்கள் மற்றும் சங்கச் செயலா்கள் என மொத்தம் 22 பேருக்கு தலா ரூ. 25,000 பரிசுத் தொகையை பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினாா்.

ஆவினின் அனைத்து சரக துணைப்பதிவாளா்களின் பணித்திறன் குறித்து பால்வளத்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழகத்தில் பால் உற்பத்தி திறன் அதிகமுள்ள அனைத்து கிராமங்களிலும் தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்ய முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் துணைப் பதிவாளா்கள் பொது மேலாளருடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவுரை வழங்கினாா்.

அதைத்தொடா்ந்து, மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறந்த பால் உற்பத்தியாளா்கள் 4 பேருக்கும், சிறந்த தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க செயலா்கள் 12 பேருக்கும், சிறந்த தொகுப்பு பால் குளிா்விப்பு மைய செயலா்கள் 6 பேருக்கும் தலா ரூ.25,000 பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினாா். அதன்படி மொத்தம் 22 பேருக்கு ரூ.5.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அரசு செயலா் ந.சுப்பையன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.