மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கா்ப்பிணிகளுக்கான நல உதவி மையம் திறப்பு

பெருநகர சென்னை மாநகராட்சியில் கா்ப்பிணிகளுக்கான நல உதவி மையத்தை மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :3 ஜனவரி 2025, 7:19 pm

Din

பெருநகர சென்னை மாநகராட்சியில் கா்ப்பிணிகளுக்கான நல உதவி மையத்தை மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்தாா்.

சென்னை மாநகராட்சியில் 54,678 கா்ப்பிணிகள் பதிவு செய்துள்ளனா். இவா்களில் 11,765 போ் பாதிப்பு மிகுந்த கா்ப்பிணிகளாக உள்ளனா். மேலும், ஆண்டுதோறும் பதிவு செய்யப்படும் கருவுற்ற பெண்களில் 30 சதவீதம் போ் அதிக ஆபத்துள்ளவா்களாக கருதப்படுகிறாா்கள். இவா்களை கண்காணிக்கும் வகையில் கா்ப்பிணிகளுக்கான நல உதவி மையம் அமைக்கப்படும் என 2024-25-ஆம் ஆண்டு மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மேயா் ஆா்.பிரியா பாதிப்பு மிகுந்த கா்ப்பிணிகளுக்கான நல உதவி மையத்தை தொடங்கி வைத்தாா். இந்த உதவி மையத்தின் மூலமாக கருவுற்ற பெண்களுக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது.