ஆவணி மாத பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்புஉச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

பொங்கல் திருநாள்: சிறப்பு ரயில்கள் இயக்கம்! எங்கெங்கு?

பொங்கல் திருநாளையொட்டி, சென்னையில் இருந்து 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:58 pm IST

பொங்கல் திருநாளையொட்டி, சென்னையில் இருந்து 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஜனவரி 13 ஆம் தேதியில் சிறப்பு ரயில் (எண்: 06093) இயக்கப்படும். தாம்பரத்தில் இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 12.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

சென்னை தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு ஜனவரி 11,13,18 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06103) இயக்கப்படும். தாம்பரத்தில் முதல்நாள் மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும்.

சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஜனவரி 13,20,27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06091) இயக்கப்படும். தாம்பரத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோயிலுக்கு ஜனவரி 12,19 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்: 06089) இயக்கப்படும். சென்ட்ரலிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் பகல் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.