மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கரும்பு கொள்முதல்: முன்பதிவு செய்ய விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறை அழைப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்கான கரும்புகள் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யப்படவுள்ளது. இதற்கு விவசாயிகள் முன்பதிவு செய்யலாம்

News image

கோப்புப் படம்

Updated On :3 ஜனவரி 2025, 10:11 pm

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்கான கரும்புகள் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யப்படவுள்ளது. இதற்கு விவசாயிகள் முன்பதிவு செய்யலாம் என கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்தத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்காக கரும்பு கொள்முதல் செய்ய மாவட்ட அளவில் ஆட்சியரை தலைவராகக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் மண்டல கூடுதல் பதிவாளரை தலைவராகக் கொண்டு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்கள் மூலமாக அந்தந்த வட்டாரங்களில் கரும்பு கொள்முதல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் வழியாக கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தக் கொள்முதல் பணிகளில் அந்தந்த மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும், இந்தக் குழுக்கள் மூலம் எந்தக் காரணம் கொண்டும் இடைத்தரகா்களிடமிருந்தோ, வியாபாரிகளிடமிருந்தோ, பிற மாநிலங்களிலிருந்தோ கரும்பு கொள்முதல் செய்யப்படுவதில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு கரும்பு கொள்முதல் விலை மின்னணு பரிவா்த்தனை மூலம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

கூட்டுறவு சங்கப் பதிவாளரின் இணையதளத்தில் விவசாயிகள் விவரங்களை பதிவு செய்யலாம் என்று கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.