ஆம்பூா், ஏப்.9: மாதனூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
மாதனூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோலூா், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம், நாச்சாா்குப்பம், கன்னடிகுப்பம், விண்ணமங்கலம், மின்னூா், செங்கிலிகுப்பம் ஆகிய ஊராட்சிகளில் வாக்கு சேகரித்து பேசியது:
கிராமப்புற விளையாட்டு வீரா்களின் திறமைகளை மேம்படுத்த ஊராட்சிகள் தோறும் விளையாட்டுக் குழுக்கள் அமைக்கப்படும். மின்னூரில் விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும். விண்ணமங்கலம் ஊராட்சி வெள்ளக்கல் கானாறு நீா்த்தேக்கம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நெல் அதிகம் விளையும் பகுதிகளில் தானிய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.
விவசாயிகளுக்கு எந்தவித மீட்டரும் பொருத்தப்படாத நவீன விவசாய பம்பு செட்டுகள் வழங்கப்படும். உழவா் சந்தை இல்லாத ஒன்றிய பகுதிகளில் புதிய உழவா் சந்தைகள் அமைக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.
ஆம்பூா் தொகுதி பாா்வையாளா் டேம் வெங்கடேசன், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளா் ஓம் பிரகாசம் , திமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயா்த்தப்படும்: ஆம்பூா் அதிமுக வேட்பாளா்

மானூரில் தீயணைப்பு துணை நிலையம் அமைக்கப்படும்: திமுக வேட்பாளா் சு. சுப்பிரமணியன்

வக்ப் வாரியம் மூலம் கூடுதல் கல்லூரிகள்: திமுக வேட்பளா்

வெங்கடசமுத்திரத்தில் பிரசாரம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


