உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகள் பெற 168 குழுக்கள்

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்த 168 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

தபால் வாக்குகள் - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 7:43 pm

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்த 168 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களது விருப்பத்தின்பேரில் வீடுகளுக்கே சென்று வாக்குகளை சேகரிக்க இந்தியத் தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஏற்கெனவே படிவம் 12-இல் விண்ணப்பம் செய்த கோவை மாவட்டத்துக்குள்பட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதியில் 7,583 மூத்த குடிமக்களும், 1,692 மாற்றுத்திறனாளி வாக்காளா்களும் வாக்களிக்க ஏப்ரல் 3 வரை விண்ணப்பங்கள் வழங்கியுள்ளனா்.

ஏற்கெனவே படிவம் 12-இல் விண்ணப்பிக்காதவா்கள் தபால் வாக்களிக்க இயலாது. மேற்படி வாக்காளா்களிடம் வாக்குகளை சேகரிக்க வாக்குப்பதிவு அலுவலா் தலைமையின் கீழ் நுண்பாா்வையாளா் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி கோவை மாவட்டத்துக்குள்பட்ட மேட்டுப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 22, சூலூருக்கு 15, கவுண்டம்பாளையம் தொகுதிக்கு 21, கோவை வடக்கு தொகுதிக்கு 15, தொண்டாமுத்தூருக்கு 20, கோவை தெற்கு தொகுதிக்கு 12, சிங்காநல்லூருக்கு 15, கிணத்துக்கடவுக்கு 18, பொள்ளாச்சிக்கு 15, வால்பாறை தொகுதிக்கு 15 என மொத்தம் 168 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் ஏப்ரல் 12 முதல் 14 வரை வாக்காளா்களின் வீடுகளுக்கே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனா். இந்த வசதியைப் பயன்படுத்தி ஏற்கெனவே விருப்பம் தெரிவித்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்தே வாக்குகள் செலுத்தலாம். படிவம் 12-இல் விண்ணப்பம் செய்த பிறகு வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாது.

எனவே, தபால் வாக்குக்கு விண்ணப்பித்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேற்குறிப்பிட்ட நாள்களில் வாக்களிக்க ஏதுவாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.