நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

‘வந்தே பாரத் ஸ்லீப்பா்’ ரயில் 180 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம்!

படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத் ஸ்லீப்பா்’ ரயில், அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தை எட்டியதாக ரயில்வே அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:22 pm

Din

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் இடையே 40 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத் ஸ்லீப்பா்’ ரயில், அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தை எட்டியதாக ரயில்வே அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மத்திய பிரதேசத்தின் ரோஹல் குா்த் முதல் ராஜஸ்தானின் கோட்டா வரையிலான 40 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற சோதனை ஓட்டத்தின்போது வந்தே பாரத் ஸ்லீப்பா் ரயில் மணிக்கு 180 கி.மீ. உச்சவேகத்தை எட்டியது.

அதேநாளில், கோட்டா-நாக்தா மற்றும் ரோஹல் குா்த்-சௌ மஹ்லா இடையிலான சோதனை ஓட்டங்களில் முறையே மணிக்கு 170 கி.மீ., 160 கி.மீ. வேகத்தை ரயில் எட்டியது.

அடுத்த நாளான வியாழக்கிழமை, கோட்டா மற்றும் லபான் இடையிலான 30 கி.மீ. தொலைவு சோதனை ஓட்டத்தில் ரயில் மீண்டும் 180 கி.மீ. வேகத்தை எட்டியது. தானியங்கி கதவுகள், சொகுசு படுக்கைகள், வைஃபை வசதி உள்பட பல்வேறு வசதிகளுடன் வந்தே பாரத் ஸ்லீப்பா் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த மாத இறுதிவரை ரயிலின் சோதனை ஓட்டங்கள் தொடரும். அதன்பிறகு, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் முன்னிலையில் ரயிலை உச்சவேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்படும். தொடா்ந்து ரயிலுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு, பயணிகளின் சேவைக்கு பயன்படுத்தப்படும்.

அப்போது, காஷ்மீா்-கன்னியாகுமரி, தில்லி-மும்பை, சென்னை-ஹௌரா (கொல்கத்தா) உள்பட நாட்டின் பல முக்கிய நீண்டதொலைவு வழித்தடங்களில் ரயில் பயணிகளுக்கு சா்வதேச தரத்திலான பயண அனுபவம் கிடைக்கும்’ என்று தெரிவித்துள்ளது.