டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மறியல்

விழுப்புரம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :6 ஜனவரி 2025, 6:26 am

DIN

விழுப்புரம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பில் முழு நீளக் கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டக் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் விவசாயிகளிடமிருந்து பன்னீர் கரும்பை கொள்முதல் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு விவசாயியிடமிருந்து 20 கரும்புகள் கொண்ட 50 கட்டுகள் மட்டுமே விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

கூட்டுறவுத் துறையின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், விவசாயிகள் உற்பத்தி செய்த அனைத்து கரும்புகளையும் கொள்முதல் செய்ய வலியுறுத்தி , திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகிலுள்ள பிடாகம் பகுதியில் திங்கள்கிழமை காலை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த விழுப்புரம் ஏஎஸ்பி ரவீந்திரகுமார் குப்தா தலைமையில், தாலுகா போலீஸார் நிகழ்விடத்துக்கு விரைந்து, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிட செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.