ஜன.15 நெட் தேர்வு நடைபெறாது - யுஜிசி அறிவிப்பு

மாட்டுப் பொங்கலன்று (ஜன.15) நடைபெறவிருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு...
ஜன.15 நெட் தேர்வு நடைபெறாது - யுஜிசி அறிவிப்பு
Published on
Updated on
1 min read

மாட்டுப்பொங்கல் திருநாளன்று (ஜன.15) நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானிய குழுவால் (யுஜிசி) உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கான ‘நெட்’ தேர்வு, தேசிய தேர்வு முகமையால் (என்டிஏ) கணினி வழியில் கடந்த 3-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், ஜன.15-ஆம் தேதியன்று நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மாற்று தேதியில் நடத்தப்படுமென்றும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை(என்டிஏ) அறிவித்துள்ளது.

ஜன. 16-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்வு, எவ்வித மாற்றமுமின்றி அதே தேதியில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com