ஜன.15 நெட் தேர்வு நடைபெறாது - யுஜிசி அறிவிப்பு
மாட்டுப் பொங்கலன்று (ஜன.15) நடைபெறவிருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு...


மாட்டுப்பொங்கல் திருநாளன்று (ஜன.15) நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானிய குழுவால் (யுஜிசி) உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கான ‘நெட்’ தேர்வு, தேசிய தேர்வு முகமையால் (என்டிஏ) கணினி வழியில் கடந்த 3-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், ஜன.15-ஆம் தேதியன்று நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மாற்று தேதியில் நடத்தப்படுமென்றும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை(என்டிஏ) அறிவித்துள்ளது.
ஜன. 16-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்வு, எவ்வித மாற்றமுமின்றி அதே தேதியில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...