
மாட்டுப்பொங்கல் திருநாளன்று (ஜன.15) நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானிய குழுவால் (யுஜிசி) உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கான ‘நெட்’ தேர்வு, தேசிய தேர்வு முகமையால் (என்டிஏ) கணினி வழியில் கடந்த 3-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், ஜன.15-ஆம் தேதியன்று நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மாற்று தேதியில் நடத்தப்படுமென்றும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை(என்டிஏ) அறிவித்துள்ளது.
ஜன. 16-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்வு, எவ்வித மாற்றமுமின்றி அதே தேதியில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.