சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கம்: பயணிகள் வரவேற்பு!

வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இன்றுமுதல் இணைப்பு...

@GMSRailway | X

Published On :

திருநெல்வேலி - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2023-இல் தொடங்கப்பட்டது. டிக்கெட் கட்டணம் கூடுதலாக இருந்தாலும், பயண நேரம் குறைவு என்பதால் இந்த ரயிலுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இன்றுமுதல் இணைக்கப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த வழித்தடத்தில் முதல்முதலாக 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், திருநெல்வேலி சந்திப்பிலிருந்து இன்று(ஜன. 15) அதிகாலை மணிக்கு 6.05 புறப்பட்டது.

அதேபோல, சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு 16 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.