/

பொங்கல்: அரசு பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம்

பொங்கலையொட்டி அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

News image

அரசுப் பேருந்து(கோப்புப்படம்)

Updated On :17 ஜனவரி 2025, 6:12 pm IST

பொங்கலையொட்டி அரசுப் பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஜன.10 முதல் 13 வரையிலான 4 நாள்களில் இயக்கப்பட்ட 15,866 பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணித்துள்ளனர் என்றும் விடுமுறை முடிந்து திரும்புவதற்காக ஜன.19 வரை 22,676 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்றும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.

மேலும் கடைசிநேர கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்து பயணிக்கவும் அரசு வேண்டுகோள்விடுத்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் கடந்த 10ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த சிறப்பு பேருந்துகளில் நாள்தோறும் ஏராளமானோா் பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.