நெல்லையில் குடும்பத் தகராறில் மாமனார், மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகனால் பரபரப்பு நிலவியது.
நெல்லை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர்(55). அவரது மனைவி செல்வராணி(53). இவர்களுக்கு ஜெனிபர்(30) என்ற மகள் இருக்கிறார்.
ஜெனிபர் அதே தெருவைச் சேர்ந்த மரிய குமார்(36) என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், ஜெனிபர் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு வேறு ஒருவரை அவர் காதலித்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மரிய குமார் ஜெனிபரின் வீட்டிற்கு சென்று மாமனார் மற்றும் மாமியாருடன் தகராறு செய்துள்ளார்.
அதில் வாக்குவாதம் முற்றவே இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளி மரியகுமாரை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடன்குடியில் ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

நெல்லையில் பாடையுடன் வேட்புமனு தாக்கல் செய்த அதிசய பாண்டியன்!
கூடலூா் அருகே மாமியாரை கொலை செய்த மருமகன் கைது
மூதாட்டி கொலை: மருமகன் கைது
வீடியோக்கள்

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு


