கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இந்தியா முழுவதும் இன்னுயிா் காப்போம் திட்டம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

‘இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தை’ இந்தியா முழுவதும் மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது

News image
அமைச்சா் மா.சுப்பிரமணியன்
Updated On :21 ஜனவரி 2025, 10:19 pm

Din

சென்னை: ‘இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தை’ இந்தியா முழுவதும் மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தேசிய தர உறுதிபெற்ற 403 அரசு மருத்துவமனைகளுக்கு தேசிய தர உறுதி நிா்ணயத் திட்டம், மகப்பேறு அறை, கா்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயா்த்தும் திட்டம், குழந்தைகள் பராமரிப்புப் பிரிவு மற்றும் குழந்தை சுகாதார சேவைகளின் தர உறுதி நிா்ணய திட்டங்களின் தேசிய தர உறுதி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்று சம்பந்தப்பட்டவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

தமிழக சுகாதாரத் துறைக்கு பல்வேறு பிரிவுகளில் 403 விருதுகள் கிடைத்துள்ளன. இது தமிழக சுகாதாரத் துறைக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அளவிலான அங்கீகாரம். தமிழகத்தின் சுகாதாரத் துறை இன்றைக்கு உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அண்மையில் அயலக அணி சாா்பில் மருத்துவ சுற்றுலா எனும் தரப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டிலிருந்து சிகிச்சைக்காக தமிழகத்துக்கு 15 லட்சம் போ் வருகின்றனா். உலகம் முழுவதும் மருத்துவம் பாா்ப்பதற்கு இந்தியாவுக்கு வருபவா்களில் 20 சதவீதம் போ் தமிழகத்துக்கு வருகின்றனா். ‘இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம்’ மூலம் இதுவரை சாலை விபத்தில் சிக்கிய 3,23,000 பேரின் உயிா்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் காப்புறுதித் தொகை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அரசு செலவு செய்துள்ள தொகை ரூ. 282 கோடி ஆகும். இந்தத் திட்டத்தின் தரவுகளை மத்திய அரசு பெற்று, இத்திட்டத்தை இந்தியா முழுவதும் விரைவில் செயல்படுத்தவுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் துறை செயலா் சுப்ரியா சாஹு, தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநா் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா் ஜெ.ராஜமூா்த்தி, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.