தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

கீழடி இணையதளம் தொடக்கம்: மெய்நிகர் விடியோவும் இணைப்பு

கீழடி இணையதளம் தொடக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தொல்லியல் பெருமைவாய்ந்த பொருள்களை மெய்நிகர் விடியோவில் காணலாம்.

News image

இணையதளம் தொடக்கம்

Updated On :23 ஜனவரி 2025, 2:39 pm IST

கீழடியில் அகழாய்வு மூலம் தோண்டி கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பெருமைவாய்ந்த பொருள்களை இணையதளம் வாயிலாகக் காணும் வகையில் கீழடி இணையதளத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கீழடி அருங்காட்சியத் திரையரங்கில் திரையிடப்படும் ஆவணப்படம் மற்றும் காட்சிக் கூடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து வகையான தரவுகள் எனக் கீழடி அருங்காட்சியகம் குறித்தான விவரங்களயும் இந்த மெய்நிகர் சுற்றுலாவில் கண்டு மகிழலாம்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் துறையினர் அகழாய்வுகளை மேற்கொண்டு, பல பெருமை வாய்ந்த் தொல்லியல் கட்டமைப்புகள் மற்றும் பொருள்களைக் கண்டறிந்துள்ளனர். இவற்றை மக்கள் இருக்கும் இடத்திலிருந்தே காணும் வகையில், கீழடி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் காண மெய்நிகர் சுற்றுலாவை உருவாக்கி கீழடி இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை மக்கள் பாரக்கும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கீழடி ஆவணப்படம் மற்றும் கீழடி அருங்காட்சியகம் குறித்தான அனைத்து விவரங்களையும், இங்குக் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பெருமைவாய்ந்த பொருள்களையும் இந்த இணையதளத்தில் கண்டு மகிழலாம்.

வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம் என்ற அறிமுகத்துடன் இந்த இணையதளத்தை பார்வையிடலாம். இங்கு கீழடியின் செயலி, அது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகள், அகழாய்வுகள் பற்றிய தகவல்களை மக்கள் அறிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.