கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

சாதிக்கும் தமிழ்நாடு: புகழும் மத்திய அரசு!

இந்தியாவில் தோல் பொருள்கள் தயாரிப்புத் துறையில் தமிழ்நாடு சாதனை புரிந்து வருவதாக டி.ஆர்.பி. ராஜா எக்ஸ் பதிவு

News image

தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா (கோப்புப் படம்) - X | Dr. T R B Rajaa

Updated On :31 ஜனவரி 2025, 6:40 pm IST

இந்தியாவில் தோல் பொருள்கள் தயாரிப்புத் துறையில் தமிழ்நாடு சாதனை புரிந்து வருவதாக தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார்.

இந்தியாவில் தோல் பொருள்கள் தயாரிப்புத் துறையில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்து வருவதாக மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் கூறியுள்ளது. தொடர்ந்து, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியில் தமிழ்நாடு இருப்பதாகவும் கூறியது.

நாட்டின் காலணிகள் மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தியில் 38 சதவிகிதத்தையும், தோல் பொருள்கள் ஏற்றுமதியில் சுமார் 47 சதவிகிதத்தையும் தமிழ்நாடு வழங்குவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், காலணி தொழிற்சாலைகள் மூலம் தமிழ்நாட்டில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதாகவும் கூறுகிறது. இந்த ஆய்வறிக்கை குறித்து தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.