நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கும் விஜய்? தவெக செயற்குழுக் கூட்டம் தொடங்கியது!

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் பற்றி...

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப்படம்

Updated On :4 ஜூலை 2025, 11:29 am IST

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது.

சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில், கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

முதல்கட்டமாக ஆகஸ்ட் 15 முதல் 100 இடங்களுக்கு விஜய் மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப்பயணம் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், செயற்குழுக் கூட்டத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து தீர்மானத்தை விஜய் வாசிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக அதிமுகவும் பாஜகவும் ஏற்கெனவே கூட்டணி அமைத்துள்ளது. இன்னும் பாமக, தவெக மற்றும் தேமுதிக ஆகிய முக்கிய கட்சிகள் மட்டும் கூட்டணி நிலைபாட்டை அறிவிக்காமல் உள்ளனர்.

இதில், முதல்முறையாக தேர்தல் களம் காணவிருக்கும் விஜய்யின் தவெக தனித்துப் போட்டியிடுமா? அல்லது கூட்டணி அமைக்குமா? என்ற கேள்வி இன்று பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

The party's executive committee meeting began under the chairmanship of Tamizhaga vettri kazhagam leader Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.