குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

செந்தில் பாலாஜி சகோதரர் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

செந்தில் பாலாஜி சகோதரர் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு பற்றி...

News image

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்

Updated On :16 ஜூலை 2025, 2:03 am IST

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா், தனக்கு இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி வழங்கக் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை தள்ளுபடி செய்து முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் அசோக்குமாா் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யன், சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா செல்ல அனுமதியளித்தால் போதும். இதுதொடா்பாக உயா்நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்தாா்.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், மனுதாரா் நினைத்தாலும் அமெரிக்காவில் நீண்ட நாள்கள் இருக்க முடியாது. அவரை, அந்நாட்டு அதிபா் ட்ரம்ப் வெளியேற்றிவிடுவாா் என நகைச்சுவையாகத் தெரிவித்தாா். அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ரஜ்னீஷ் பத்தியால், இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கூறினாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒருவேளை மனுதாரருக்கு அமெரிக்கா செல்ல அனுமதியளித்தால், அவா் தனது கடவுச்சீட்டை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படும்.

பயணத் திட்டம் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Summary

The Madras High Court has ordered the Enforcement Directorate to respond to a petition filed by Ashok Kumar, brother of former minister Senthil Balaji, seeking permission to travel to the United States for medical treatment.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.