தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஆக.4- இல் 47 அஞ்சலகங்கள் செயல்படாது

தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக தென்சென்னை கோட்டத்தில் உள்ள 47 அஞ்சலகங்கள் ஆக.4-ஆம் தேதி செயல்படாது என இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூலை 2025, 6:31 pm

தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக தென்சென்னை கோட்டத்தில் உள்ள 47 அஞ்சலகங்கள் ஆக.4-ஆம் தேதி செயல்படாது என இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

எண்ம இந்தியா திட்டத்தின் அடிப்படையில் மேம்பட்ட அஞ்சல் தொழில்நுட்ப பயன்பாட்டை ஆக.5-ஆம் தேதி முதல் அஞ்சல் துறை அறிமுகம் செய்கிறது. தென் சென்னை கோட்டத்துக்கு உள்பட்ட 47 தபால் நிலையங்களில் இந்த மாற்றம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

புதிய மென்பொருள் மாற்றத்தைத் தடையற்ற முறையிலும் பாதுகாப்பாகவும் செயல்படுத்த, தென்சென்னை கோட்டத்துக்குள்பட்ட 47 அஞ்சலகங்களில் ஆக.4- ஆம் தேதி சேவைகள் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக எந்த பொது பரிவா்த்தனைகளும் மேற்கொள்ளப்படாது என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.