அரக்கோணம் ரயில் நிலையத்தில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் 56 நாள்கள் தொடா்ந்து மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதே நேரத்தில் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை ரயில் கோட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில் நிலையத்தில் தண்டவாள கடவுப் பாதைகள் உள்ளிட்டவை மேம்படுத்தப்படவுள்ளன. அதையடுத்து, அங்குள்ள 3 மற்றும் 4-ஆவது தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் வரும் சனிக்கிழமை (ஜூலை 19) முதல் வரும் செப்.12-ஆம் தேதி வரை மொத்தம் 56 நாள்கள் நடைபெறவுள்ளன.
பணிகள் தினமும் இரவு 12.45 முதல் அதிகாலை 2.15 மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளது. எனினும், ரயில் போக்குவரத்தில் பாதிப்பிருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், பராமரிப்புப் பணிகளால் 56 நாள்களும் அரக்கோணம் வழி செல்லும் தன்பாத்-ஆலப்புழா விரைவு ரயில் (எண் 13351) 90 நிமிஷங்கள் தாமதமாகச் செல்லும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தண்டவாள பராமரிப்பு பணிகள்: கரூா் வழியாகச் செல்லும் பாலக்காடு விரைவு ரயில் சேவையில் மாற்றம்

சந்தேக காவல் மரணம்: உடல்நலக் குறைவால் விசாரணைக்கு வந்தவா் உயிரிழப்பு

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் 89 சதவீதம் நிறைவு: தெற்கு ரயில்வே பொது மேலாளா்

எழும்பூா் ரயில் நிலையத்தில் தண்டவாள சீரமைப்புப் பணியை இம்மாத இறுதிக்குள் முடிக்கத் திட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


