வேலூரில் நாய்க்கறி விற்பனை செய்வதாக பரவிய வந்தியைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர், சலவன் பேட்டையைச் சேர்ந்தவர் வடிவேலு (வயது 48). சமூக ஆர்வலர். இவர் வேலூர் பர்மா பஜாரில் ஓட்டல் நடத்தி வந்தார். காயமடைந்த தெரு நாய்களை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து உணவு கொடுத்து வந்தார்.
தற்போது சலபன்பேட்டையில் உள்ள வீட்டை விற்பனை செய்துவிட்டு காட்பாடி காந்தி நகர் வள்ளலார் தெருவில் தனது சகோதரர் பிரேம் ஆனந்துடன் வசித்து வருகிறார். திருவலம், எஸ்.எல்.புதூர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரின் கட்டடத்தை வாடகைக்கு எடுத்து நாய்கள் பராமரிப்பு மையம் நடத்தி வருகிறார்.
இங்கு காயமடைந்த மற்றும் வயது முதிர்ந்த, நோய்வாய் பட்ட தெரு நாய்களை மீட்டு உணவு மற்றும் சிகிச்சை அளித்து வருகிறார். நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக வடிவேல் முறையான உரிமம் பெற்று உள்ளார்.
அவரது பராமரிப்பு மையத்தில் தற்போது 25 நாய்கள் உள்ளன. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், நாய்களை அடைத்து வைத்து அவற்றை வெட்டி விற்பனை செய்வதாக சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து இன்று காலை நாய்கள் பராமரிப்பு மையத்துக்குச் சென்ற அவர்கள், உடனடியாக அப்பகுதியில் இருந்து காலி செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவலம் காவல் நிலைய ஆய்வாளர் தயாளன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் நாய்க்கறி வெட்டி விற்பனை செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. வதந்தி பரவியுள்ளது எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த காட்பாடி வட்டாச்சியர், பிராணிகள் வதை தடுப்பு சங்கம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்கள் முறையாக விசாரணை நடத்திய பிறகு முழுமையான விவரங்கள் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.
Summary
Following a rumor that dog meat was being sold in Vellore, the public protested.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் ஆம்புலன்ஸ் சென்ற விவகாரம்: வதந்தி பரப்பினால் வழக்கு: சைபா் கிரைம் எச்சரிக்கை

கோடை வெப்பத்தால் நுங்கு விலை உயா்வு

தட்டுப்பாடு வதந்தி: பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடல்

தட்டுப்பாடு வதந்தி: பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகனங்களுடன் குவிந்த மக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


