சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் 54-ஆவது தலைமை நீதிபதியாக மநிந்திரா மோகன் ஸ்ரீவாஸ்தவா பதவியேற்றார். அவருக்கு தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர். என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஆளுநர் மாளிகையில் இன்று(ஜூலை 21) நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் என். முருகானந்தம் முன்னிலையில் எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.
தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் இந்நிகழ்ச்சியில் ஏற்கெனவே பங்கேற்பதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவருக்கு திடீரென உடல்நலம் குன்றியதால் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
இதையும் படிக்க: முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துரைமுருகன்
Summary
Justice Manindra Mohan Shrivastava sworn in as 54th Chief Justice of Madras High Court
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 10) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 9) எந்தெந்த வழக்குகளின் விசாரணை?






