பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஆடி அமாவாசை: மேட்டூர் காவிரி கரையில் தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள்!

ஆடி அமாவாசை என்பதால் மேட்டூர் காவிரி கரையில் தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள்!

News image

காவிரி கரையில்

Updated On :24 ஜூலை 2025, 9:36 am

இணையதளச் செய்திப் பிரிவு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் காவிரி கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமான மக்கள் குவிந்தனர்.

புனித நதிகளில் ஒன்றாக காவிரி விளங்குகிறது. இதனால் மேட்டூர் காவிரி கரைகளில் உள்ள படித்துறைகளில் ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றன.

இன்று ஆடி அமாவாசை என்பதால் சேலம், தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டங்களின் பல பகுதியில் இருந்தும் மக்கள் மேட்டூர் அணை காவிரியில் தர்ப்பணம் கொடுத்து காவிரி ஆற்றில் புனித நீராடி வருகின்றனர்.

மேட்டூர் அணையின் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் புரோகிதர்களைக் கொண்டு வேத மந்திரங்கள் முழங்க முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த வருகின்றனர்.

ஆடி அமாவாசை தினமான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களின் ஆன்மா இறைநிலை அடையும் என்பதோடு குடும்பத்தில் தீமைகள் விலகி நன்மைகள் ஏற்படும் என்ற ஆன்மிக அற நிலையை உணர்ந்த மக்கள் புண்ணிய நதியான காவிரியில் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

அணைக்கட்டு முனியப்பன் கோவில், மேச்சேரி பத்திரகாளியம்மன் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி சுவாமி தரிசனம் செய்தனர். பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.