ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவர் தற்கொலை

சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

News image
அண்ணா பல்கலை. (கோப்புப்படம்)- Din
Updated On :24 ஜூலை 2025, 9:27 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் இயங்கி வரும் அழகப்பா கல்லூரியில் பயின்று வந்த மாணவர் சபரீஷ்வரன் (18) மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

அழகப்பா கல்லூரியில் இளங்கலை 2ஆம் ஆண்டு லெதர் டெக்னாலஜி படித்து வந்த சபரீஷ்வரன், விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது உடல் கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.