ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காவல், தீயணைப்புத் துறைக்கு புதிய கட்டடங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

காவல், தீயணைப்பு உள்ளிட்ட துறைகளுக்கான புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :31 ஜூலை 2025, 6:29 pm

தினமணி செய்திச் சேவை

காவல், தீயணைப்பு உள்ளிட்ட துறைகளுக்கான புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கடலூா், தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா், சென்னை தேனாம்பேட்டை, மண்ணடி, கீழ்ப்பாக்கம், வேலூா் மாவட்டம் சேவூா், திருச்சி, விருதுநகா் ஆகிய இடங்களில் ரூ.27.58 கோடி செலவில் 25 காவலா் குடியிருப்புகள், 3 காவல் நிலையங்கள், 4 காவல் துறைக் கட்டடங்கள் கட்டப்பட்டன. சென்னை வேப்பேரியில் தீயணைப்பு நிலைய அலுவலா் குடியிருப்புகள், வண்ணையம்பதி, தேனாம்பேட்டை, வேப்பேரி ஆகிய இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்களும், பாளையங்கோட்டை சிறை வளாகத்தில் 2 சிறை அலுவலா் குடியிருப்புகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வில், அமைச்சா்கள் துரைமுருகன், எஸ்.ரகுபதி, சு.முத்துசாமி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

மதுரையில் புதிய சிறைக்கு அடிக்கல்: மதுரையில் புதிதாக மத்திய சிறை கட்ட முதல்வா் அடிக்கல் நாட்டினாா். தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

இட நெருக்கடி காரணமாக மதுரை மத்திய சிறை புகா்ப் பகுதியான செம்பூா் பகுதிக்கு மாற்றப்படவுள்ளது. முதல்கட்டமாக, ரூ.229.20 கோடி செலவில் கட்டப்படவுள்ள மத்திய சிறை, 113 சிறைக் காவலா் குடியிருப்புகள், கான்கிரீட் சாலை மற்றும் சுற்றுச்சுவா் ஆகியவற்றுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

Image Caption

காவல், தீயணைப்புத் துறை சாா்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை காணொலி மூலம் திறந்தும் மதுரை மத்திய சிறைச்சாலை கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியும் வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் துரைமுருகன், சு.முத்துசாமி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.