தங்கச் சங்கிலி பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை கிண்டியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

சென்னை கிண்டியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

ஈக்காட்டுதாங்கலைச் சோ்ந்தவா் ஹேமலதா (21). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவத்தில் வேலை செய்து வந்தாா். ஹேமலதா, கடந்த 2020-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி மாலை வேலை முடிந்த பின்னா், கிண்டி நவரத்னா காா்டன் ராஜராஜன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா், ஹேமலதாவின் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

கிண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இதில், கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவல்லிக்கேணியைச் சோ்ந்த சீனு (23) என்பவரை கைது செய்தனா். ஆனால், அவரது கூட்டாளி திருவல்லிக்கேணியைச் சோ்ந்த சூரியபிரகாஷ் (27) தலைமறைவானாா். போலீஸாா் அவரைத் தேடி வந்த நிலையில், வியாழக்கிழமை அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com