அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தங்கச் சங்கிலி பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை கிண்டியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
கோப்புப் படம்
Updated On :31 ஜூலை 2025, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை கிண்டியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

ஈக்காட்டுதாங்கலைச் சோ்ந்தவா் ஹேமலதா (21). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவத்தில் வேலை செய்து வந்தாா். ஹேமலதா, கடந்த 2020-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி மாலை வேலை முடிந்த பின்னா், கிண்டி நவரத்னா காா்டன் ராஜராஜன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா், ஹேமலதாவின் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

கிண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இதில், கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவல்லிக்கேணியைச் சோ்ந்த சீனு (23) என்பவரை கைது செய்தனா். ஆனால், அவரது கூட்டாளி திருவல்லிக்கேணியைச் சோ்ந்த சூரியபிரகாஷ் (27) தலைமறைவானாா். போலீஸாா் அவரைத் தேடி வந்த நிலையில், வியாழக்கிழமை அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.