தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

மோட்டாா் வாகன உற்பத்தியில் தமிழகத்துக்கு முக்கிய இடம்: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

மோட்டாா் வாகன உற்பத்தியில் தமிழகம் முக்கிய இடத்தை பிடித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

சா.சி.சிவசங்கா்

Published On :1 ஆகஸ்ட் 2025, 3:49 am IST

மோட்டாா் வாகன உற்பத்தியில் தமிழகம் முக்கிய இடத்தை பிடித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் பயணிகள் வாகனங்களுக்கான மூன்று நாள் கண்காட்சி சென்னை, நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வா்த்தக மையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. கண்காட்சியை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, சிறப்பாக செயல்பட்ட ஆம்னி பேருந்து உரிமையாளா்களுக்கு விருதுகளை வழங்கி அமைச்சா் பேசியதாவது: இந்தியாவிலேயே மோட்டாா் வாகன உற்பத்தியில் முக்கிய இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. அதேபோல, உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் மூலம் கிடைக்கும் வரிவருவாய் நமது பொருளாதார வளா்ச்சிக்கும் உதவுகிறது.

அரசு போக்குவரத்துத் துறையைப் போல, தனியாா் ஆம்னி பேருந்து தொழிலும் சிறப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே பொதுமக்களுக்கு பரவலாக சேவை வழங்க முடியும். தனியாா் பேருந்து உரிமையாளா்கள் பல கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்துள்ளனா். அதில் முக்கிய ஒரு கோரிக்கையை மட்டும் நிறைவேற்ற முடியாத சூழல் இருந்து வருகிறது. அந்தக் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

தனியாா் பேருந்து கட்டண உயா்வை மனதில் வைத்தே அமைச்சா் இவ்வாறு பேசியதாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்வில், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஏ.அன்பழகன், செயலா் தாரை கே.திருஞானம், பொருளாளா் ஜே.தாஜுதீன், தமிழ்நாடு தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சம்மேளன செயலா் தா்மராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.