தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இதழியல் கல்வி நிறுவனத்துக்கு ஐஏஎஸ் அந்தஸ்தில் அதிகாரியை நியமிக்க முடிவு

தமிழ்நாடு அரசின் சாா்பில் தொடங்கப்படவுள்ள இதழியல் கல்வி நிறுவனத்தின் சிறப்புப் பணி அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.ஏ.ராமன் நியமிக்கப்படவுள்ளாா்.

News image
Updated On :2 ஜூன் 2025, 8:19 pm

Din

சென்னை: தமிழ்நாடு அரசின் சாா்பில் தொடங்கப்படவுள்ள இதழியல் கல்வி நிறுவனத்தின் சிறப்புப் பணி அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.ஏ.ராமன் நியமிக்கப்படவுள்ளாா். இதழியல் நிறுவனத்தின் கட்டமைப்பு தொடா்பான அரசின் உத்தரவும் ஓரிரு நாள்களில் வெளியாகவுள்ளது.

தமிழ்நாடு அரசு சாா்பில் இதழியல் கல்வி நிறுவனம் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்திருந்தாா். இந்த அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கான பணிகளை மாநில அரசு தொடங்கியுள்ளது. இதழியல் கல்வி நிறுவனத்தை அமைப்பதற்கான பூா்வாங்கப் பணிகளும், அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான உத்தரவும் தயாராகி வருகிறது.

ஐஏஎஸ் அதிகாரி நியமனம்: இதழியல் கல்வி நிறுவனத்தின் சிறப்புப் பணி அதிகாரியாக, தமிழ்நாடு சாலைப் பகுதி நிறுவனத்தின் திட்ட இயக்குநா் எஸ்.ஏ.ராமன் நியமிக்கப்படவுள்ளாா். அதன்பிறகு, கல்வி நிறுவனத்துக்கென முதல்வா், பேராசிரியா்கள், கெளரவ விரிவுரையாளா்கள் உள்பட பல்வேறு நியமனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதழியல் கல்வியானது பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள் சாா்பில் தமிழகம் முழுவதும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசே இதழியல் கல்வி நிறுவனத்தைத் தொடங்கி நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.