கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி: நிபந்தனையுடன் அனுமதி!
கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக...

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
கோப்புப்படம்

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
கோப்புப்படம்
தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதி மன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு உள்பட்ட 14 மாவட்டங்களில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், ”சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளைகாட்டி காவல் துறையினர் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க மறுக்கிறார்கள்” என்று வாதிட்டார்.
இந்த நிலையில், இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, ”ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளரிடம் ரூ. 25 ஆயிரத்தை செலுத்த வேண்டும்.
இந்தப் பணத்தை கிராமத்தில் உள்ள நீர்நிலைகளை தூர் வாரப் பயன்படுத்தலாம்.” என்ற நிபந்தனையை விதித்து ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த உத்தரவிட்டார்.
தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல் துறையினர் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என கடந்த மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...