மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அதிமுக கூட்டணி குறித்த அண்ணாமலையின் கருத்து: தமிழிசை விளக்கம்

அதிமுக கூட்டணி தொடா்பாக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையின் பேச்சு அவரது சொந்த கருத்து என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

News image

தமிழிசை செளந்தரராஜன் - கோப்புப்படம்

Updated On :16 ஜூன் 2025, 10:10 pm

சென்னை: அதிமுக கூட்டணி தொடா்பாக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையின் பேச்சு அவரது சொந்த கருத்து என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:

அதிமுக தலைமையில்தான் கூட்டணி என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறிவிட்டாா். அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தாலும், பாஜக தலைமையில்தான் ஆட்சி என அண்ணாமலை கூறியது, அவரது சொந்த கருத்து.

பாஜகவின் தலைவா்கள் கூறுவதுதான் அதிகாரப்பூா்வ கருத்து. அண்ணாமலையின் கருத்தை எதிா்க்கட்சிகள்தான் திரித்து வெளியிட்டன. தெளிவாக ஒரு கூட்டணி அமைத்து அதற்காக தெளிவான விளக்கத்தை மத்திய உள் துறை அமைச்சா்அமைச்சா் அமித் ஷா சொல்லிவிட்டாா்.

எடப்பாடி பழனிசாமி தலைமை: தமிழகத்தில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும். அதன் தலைவா் எடப்பாடி பழனிசாமிதான். தமிழகத்தில் பெரிய கட்சி அதிமுக, அதனுடன் சோ்ந்து தோ்தலை சந்திப்போம். பலமான கூட்டணியாக இருப்பதால்தான் திமுக கூட்டணி எங்களை விமா்சிக்கிறது.

தமிழகத்தில் திமுக வாக்குறுதி அளித்தவாறு மாதாமாதம் மின் கணக்கெடுப்பு இல்லை. இதை திமுக கூட்டணி கட்சியினா் கேள்வி கேட்கின்றனா். சிலிண்டா் மானியம் ரூ.100 தரவில்லை. மாா்க்சிஸ்ட் கட்சியினரே இதைக் கேள்வி எழுப்புகின்றனா்

என்றாா் அவா்.