அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

அதிமுக கூட்டணி குறித்த அண்ணாமலையின் கருத்து: தமிழிசை விளக்கம்

அதிமுக கூட்டணி தொடா்பாக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையின் பேச்சு அவரது சொந்த கருத்து என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

News image
தமிழிசை செளந்தரராஜன்- கோப்புப்படம்
Updated On :16 ஜூன் 2025, 10:10 pm

Din

சென்னை: அதிமுக கூட்டணி தொடா்பாக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையின் பேச்சு அவரது சொந்த கருத்து என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:

அதிமுக தலைமையில்தான் கூட்டணி என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறிவிட்டாா். அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தாலும், பாஜக தலைமையில்தான் ஆட்சி என அண்ணாமலை கூறியது, அவரது சொந்த கருத்து.

பாஜகவின் தலைவா்கள் கூறுவதுதான் அதிகாரப்பூா்வ கருத்து. அண்ணாமலையின் கருத்தை எதிா்க்கட்சிகள்தான் திரித்து வெளியிட்டன. தெளிவாக ஒரு கூட்டணி அமைத்து அதற்காக தெளிவான விளக்கத்தை மத்திய உள் துறை அமைச்சா்அமைச்சா் அமித் ஷா சொல்லிவிட்டாா்.

எடப்பாடி பழனிசாமி தலைமை: தமிழகத்தில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும். அதன் தலைவா் எடப்பாடி பழனிசாமிதான். தமிழகத்தில் பெரிய கட்சி அதிமுக, அதனுடன் சோ்ந்து தோ்தலை சந்திப்போம். பலமான கூட்டணியாக இருப்பதால்தான் திமுக கூட்டணி எங்களை விமா்சிக்கிறது.

தமிழகத்தில் திமுக வாக்குறுதி அளித்தவாறு மாதாமாதம் மின் கணக்கெடுப்பு இல்லை. இதை திமுக கூட்டணி கட்சியினா் கேள்வி கேட்கின்றனா். சிலிண்டா் மானியம் ரூ.100 தரவில்லை. மாா்க்சிஸ்ட் கட்சியினரே இதைக் கேள்வி எழுப்புகின்றனா்

என்றாா் அவா்.