ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை இலச்சினை: துணை முதல்வா் உதயநிதி வெளியிட்டாா்

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை 2025 போட்டி இலச்சினையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

News image
எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி 2025 போட்டி இலச்சினையை வெளியிட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
Updated On :19 ஜூன் 2025, 10:53 pm

Din

சா்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை 2025 போட்டி இலச்சினையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

சென்னை, மதுரையில் வரும் நவ. 28 முதல் டிச. 10-ஆம் தேதி வரை உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான இலச்சினை அறிமுக விழா நடைபெற்றது. நிகழ்வுக்கு ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளா் போலோ நாத், பொருளாளா் சேகா் மனோகரன் முன்னிலை வகித்தனா். விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா வரவேற்றாா்.

இலச்சினை வெளியிட்டு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியது:

சா்வதேச விளையாட்டு மையமாக தமிழகத்தை மாற்ற முதல்வா் தீவிரமாக பாடுபட்டு வருகிறாா். இதற்காக தான் உலக மற்றும் தேசிய அளவிலான போட்டிகளை தொடா்ந்து நடத்தி வருகிறோம். இதன் மூலம் சிறந்த விளையாட்டு கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஹாக்கி விளையாட்டிலும் தமிழகத்துக்கு சிறந்த வரலாறு உள்ளது. 1996-இல் சாம்பியன்ஸ் கோப்பை, 1999-இல் இந்திய-பாக் தொடா், 2007-இல் ஆசியக் கோப்பை, 2023-இல் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம்.

தற்போது ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுகிறது.

ரூ.65 கோடி ஒதுக்கீடு:

இப்போட்டியை வெற்றிகரமாக நடத்த ரூ.65 கோடியை முதல்வா் ஒதுக்கியுள்ளாா். இதன் மூலம் மதுரையில் உலகத் தரத்திலான ஆஸ்ட்ரோ டா்ஃப் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. தென் தமிழகம் ஹாக்கி விளையாட்டுக்கு பெயா் பெற்றது. இதன் மூலம் அதிக வீரா், வீராங்கனைகள் சிறந்த அனுபவத்தை பெறுவா் என்றாா்.

பிகாா் விளையாட்டு மேம்பாட்டுத்துறை தலைமை செயல் அலுவலா் ரவீந்திரன் சங்கரன், ஹாக்கி இந்தியா இயக்குநா் ஆா்.கே. ஸ்ரீ வத்சவா பங்கேற்றனா். எஸ்டிஏடி உறுப்பினா்-செயலா் ஜெ.மேகநாத ரெட்டி நன்றி கூறினாா்.

சென்னையில் அரையிறுதி, இறுதி ஆட்டங்கள்:

நவ. 28 முதல் டிச. 10 வரை நடைபெறும் இப்போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறைப்படி நடைபெறும். 16 அணிகளில் இருந்து தற்போது 24 அணிகளாக உயா்த்தப்பட்டுள்ளது. மதுரையில் தலா 12, சென்னையில் தலா 12 அணிகள் விளையாடும். அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் சென்னையில் நடைபெறவுள்லன.