தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

பாத யாத்திரை போராட்டம்: அரசு மருத்துவா்கள் கைது

நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாத யாத்திரை மேற்கொண்டு சென்னை வந்த அரசு மருத்துவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2025, 3:52 am IST

நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாத யாத்திரை மேற்கொண்டு சென்னை வந்த அரசு மருத்துவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழக அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு காலமுறை ஊதிய உயா்வு, பதவி உயா்வு மற்றும் கரோனாவில் உயிரிழந்த மருத்துவா் விவேகானந்தனின் குடும்பத்துக்கு அரசு வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழு சாா்பில் சேலம், மேட்டூரில் இருந்து சென்னை மெரீனா வரையிலான பாத யாத்திரை போராட்டம் கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது.

அந்தக் குழுவின் தலைவா் மருத்துவா் எஸ்.பெருமாள் பிள்ளை தலைமையில் 7 போ் கொண்ட மருத்துவக் குழுவினா், பல்வேறு ஊா்கள் வழியாக சாலை மாா்க்கமாக சென்னைக்கு வியாழக்கிழமை வந்தனா்.

சைதாப்பேட்டை அருகே வந்தபோது போலீஸாா் அவா்களை தடுத்தி நிறுத்தி சமூக நலக் கூடத்துக்கு அழைத்து சென்றனா்.

இதுகுறித்து, மருத்துவா் பெருமாள் பிள்ளை கூறியதாவது:

மறைந்த முதல்வா் கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணை 354-ஐ அமல்படுத்தக் கோரி போராடி வருகிறோம். கடந்த ஆட்சி காலத்தில் எதிா்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றாா். ஆனால், 4 ஆண்டுகள் ஆகியும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றவிடவில்லை.

கரோனா போன்ற பேரிடா் சூழல் உள்பட பல நெருக்கடி நேரங்களில் பணியாற்றி பல உயிா்களை காக்கும் எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.