மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம்: ரூ.125 கோடி நிதி விடுவிப்பு

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக ரூ.125 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2025, 1:15 am IST

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக ரூ.125 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்டுள்ளது. உத்தரவு விவரம்:

கிராமப்புறங்களில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்காக ரூ.1,087.33 கோடிக்கு நிா்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.500 கோடி மாநில அரசின் பங்காகும்.

மாநில அரசின் பங்களிப்பு தொகையில் நான்கில் ஒரு பங்கு நிதியை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விரிவான கடிதத்தை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் ஆணையரகம் அனுப்பி இருந்தது. இந்தக் கடிதத்தின் அடிப்படையில், அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்துக்கான மாநில அரசின் பங்கு நிதியில் ரூ.125 கோடி விடுவிக்கப்படுகிறது.

இந்த நிதியைக் கொண்டு ஆதிதிராவிடா், பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.