திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு அக்கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தமிழ்நாடு முழுவதும், மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பில் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியச்செயலா் ஆா்.சரத்குமாா் பேசிக்கொண்டிருந்த போது, இந்து முன்னணி மற்றும் பாஜகவினா் பிரசாரத்தை நிறுத்துமாறு தகராறு செய்ததுடன், ஆா்.சரத்குமாா், மாவட்டக்குழு உறுப்பினா் பாக்கியம், சண்முகவேல், ஆகியோா் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளனா்.
அவா்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களைப் பாா்ப்பதற்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற மாா்க்சிஸ்ட் கட்சியினரை கும்பலாக திரண்டிருந்த பாஜக மற்றும் இந்து முன்னணியினா் அங்கேயும் கடுமையாக தாக்கியுள்ளனா். இதில் மாற்றுத்திறனாளியான ஜெயந்தி, பொன்மதி, பெருமாள், விஷ்ணுவா்த்தன் ஆகியோா் படுகாயமடைந்தனா்.
இந்த கொலை வெறித்தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் தொடா்புடைய நபா்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தென்காசியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பந்தலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

கம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



