
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணியை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவத் தலைவரும் அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான ஜி.கே. மணி நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம்(ஜூன் 18) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜி.கே. மணியை பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
சேலம் மேற்கு தொகுதியின் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருளும் நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.